விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி 108 தேங்காய்களை உடைத்து வழிபட்ட தேமுதிகவினர்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டு வா தலைவா தமிழகத்தை ஆளாவா தலைவா என புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து கண்ணீர் மல்க மனம் உருகி வேண்டிய தேமுதிகவினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் பூரண நலம் அடைய வேண்டி தேமுதிகவினர் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி தேமுதிக பொருளாளர் கலிய. ஏழுமலை தலைமையில் இன்று புதுச்சேரி மாநில தேமுதிக நிர்வாகிகள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதில் விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல், தாமரை பூ மற்றும் விஜயகாந்தின் போட்டோவை வைத்து மணக்குள விநாயகரிடம் விஜயகாந்த் நலம் பெற வேண்டுமென மனமுருகி வேண்டினர்.
தொடர்ந்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி 108 தேங்காய்களை கண்ணீர் மல்க உடைத்து மனம் உருகி வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் புதுச்சேரி தேமுதிக நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் புதுச்சேரி மாநில பல்வேறு தொகுதிகளை சார்ந்த தேமுதிக நிர்வாகிகள் தமிழ்மணி, பூமிநாதன், ரமேஷ், பாலமுருகன், மன்னாடிபட்டு தொகுதி தேமுதிக நிர்வாகி தனஞ்செழியன், கார்த்திகேயன், மணிகண்டன், அரியாங்குப்பம் தொகுதி ரகுநாத், திருபுவனை தொகுதி பிரபு, உருளையன்பேட்டை ஜெரால்ட், லாஸ்பேட்டை செல்வம், ஏம்பலம் தொகுதி ஸ்டீபன், ரகுநாத் உட்பட ஜீவா, பார்த்திபன், ஆறுமுகம், தேவநாதன், அன்பு, ரகு, பாலாஜி, காலாப்பட்டு தொகுதி ராமநாதன், சந்துரு, சத்யா, உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.