in

மன நோயாளிகளுடன் தன்னை அடைத்து வைத்திருப்பதாக நீதிபதியிடம் முறையீடு

மன நோயாளிகளுடன் தன்னை அடைத்து வைத்திருப்பதாக நீதிபதியிடம் முறையீடு

 

சவுக்கு சங்கரை பார்த்து நீதிபதி உங்களை காவல் துறையினர் கொடுமைப்படுத்தினார்களா என கேள்வி – கோவை சிறையில் மன நோயாளிகளுடன் தன்னை அடைத்து வைத்திருப்பதாக நீதிபதியிடம் முறையீடு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி மாவட்ட கணினி சார் குற்ற பிரிவு காவல் துறையினர் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது நீதிபதி ஜெயபிரதா ஒரு நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி உத்தரவு வழங்கினார். நேற்று மாலை 4 மணியிலிருந்து இன்று மாலை 4 மணி வரை அவருக்கு போலீஸ் காவல் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுப்படி நேற்று அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விசாரணை துவக்க வேண்டும்.

மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் மருத்துவர் பரிசோதனை செய்து ஆஜர் படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தற்போது முதலில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்து நீதிபதி ஜெயப்பிரதா முன் ஆஜர்ப்படுத்தப்படுத்திய போது சவுக்கு சங்கர் உங்களை எதுவும் டார்ச்சர் செய்தார்களா காவல்துறை விசாரணையில் என்று கேட்ட பொழுது இல்லை என பதில் அளித்தார்.

தன்னை கோவை சிறையில் தனி அறையில் வைத்துள்ளதாகவும் அதில் இருந்தால் மன நோயாளியாகி விடுவேன் என நீதிபதியிடம் முறையிட்டார்.

திருச்சி சிறையில் தன்னை அடைக்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார் ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பிய பொழுது போதை பழக்கத்தில் உள்ள சிறைவாசிகளுடன் மனம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடனும் அடைத்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் என திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். சங்கரின் வேண்டுகோள் மனுவை நீதிபதி கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து 28.05. 2024 ம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பித்தார். கோயம்புத்தூர் சிறைக்கு மீண்டும் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்படுகிறார்.

What do you think?

லாவோஸ், கம்போடியாவில் வேலையா ? எச்சரிக்கை தேவை

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா பூச்சொரிதல்