in

திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

 

திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சார்பாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்பொழுது 2000 ஆக இருக்கும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சமாக 6,750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ படி மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஈமக்ரியை தொகையாக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

What do you think?

மக்களை தேடி மருத்துவ முகாம் 4 – ஆண்டு துவக்க விழா

ரியாஸ் கான் வீட்டில் திருமண நிகழ்ச்சி கலைகட்டுகிறது