in

அருப்புக்கோட்டையில் கல்லூரி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

அருப்புக்கோட்டையில் கல்லூரி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

 

அருப்புக்கோட்டையில் கல்லூரி அருகே பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 1 கிலோ கஞ்சா பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் குற்ற தடுப்பு தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை கைப்பற்றி சோதித்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ 30 கிராம் அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனை எடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம், தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜ்(35) என்பதும் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சுயலாபம் கருதி கல்லூரி அருகே வைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை எடுத்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

What do you think?

கோட் படத்தின் மாஸ் Update

மாமதுரை விழா டபுள் டக்கர் பேருந்தில் பொதுமக்கள் உற்சாக பயணம்