in

திருச்சியில் தனியார் பள்ளி வாகனங்கள் மோதி விபத்து – மாணவ, மாணவிகள், ஆசிரியர் ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேர் படுகாயம்

திருச்சியில் தனியார் பள்ளி வாகனங்கள் மோதி விபத்து – மாணவ, மாணவிகள், ஆசிரியர் ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேர் படுகாயம்

திருச்சி கே கே நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் திருச்சி மாத்தூர் குண்டூர் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராசி மஹால் சாலையில் வந்த பள்ளி வாகனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு முந்தி செல்ல முயன்றபோது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவ மாணவிகள் ஒரு ஆசிரியர் பள்ளி வாகன ஓட்டுநர்உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் உடனடியாக வந்து காயமடைந்த மாணவ மாணவிகளை சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும் விபத்தை ஏற்படுத்திய இரண்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் மேலும் இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி காட்டூர் ஆயில் மில்லில் நடைபெற்ற சிலை திறப்பு

முசிறி அருகே பாலப்பட்டி கிராமத்தில் நில தகராறில் விவசாயி வெட்டி கொடூர கொலை