in

சாதி ஒழிப்பு நாளாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 100வது பிறந்தநாள் விழா

தியாகி இமானுவேல் சேகரனாரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமையில் எட்டு மாவட்டங்கள் இணைந்து பரமக்குடி நகரின் முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டைகள் முழங்க வளம் வந்து பால்குடம், கோலாட்டம், கும்மியாட்டம், என ஆட்டம் பாட்டத்துடன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவித்திட உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை சாதி ஒழிப்பு நாளாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் அரசு கட்டக்கூடிய மணி மண்டபத்தில் கூடுதல் நிதி ஒதுக்கி அதில் ஒரு படிப்பகம் அமைத்து தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளார்

What do you think?

தேவேந்திரகுல சங்கம் சார்பில் மரியாதை

ராஜா ராணி 3 சீரியல் விரைவில் வரப்போவதாக அறிவிப்பு