in

புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்


Watch – YouTube Click

புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

 

புதுச்சேரியில் உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

புதுச்சேரி நகரப்பகுதியில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. இந்த ஆலயத்தின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், மீரட் மறைமாவட்ட பேராயர் பாஸ்கர் ஏசுராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி மரம் அருகே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலய கொடி மரத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதனைடுத்து நவ நாட்களில் காலை மாலை இருவேலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி வருகிற 9-ம் தேதி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆண்டு பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய பங்குதந்தை பிச்சைமுத்து, உதவி பங்குதந்தை சின்னப்பன், அருட்திரு பால் தெலாமூர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பாமாயில் தொழிற்சாலையால் விவசாயம் கேள்விக்குறி கிராம மக்கள் போராட்டம்

விஜே சித்துவை…. கைதி செய்யாமல்… TTF..வாசனை… மட்டும் கைதி செய்வது நாயமா?