in

முசிறியில் பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


Watch – YouTube Click

முசிறியில் பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

திருச்சி மாவட்டம், முசிறி பாரிவள்ளல் நகரை சேர்ந்தவர் அசோக் (42). இவர் கடந்த 18-ம் தேதி வால்பாறையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து முன்பக்க கதவை திறந்து பார்த்த போது பின்பக்க மரக்கதவு மற்றும் இரும்பு கேட் உடைக்கப்பட்டும், வீட்டின் படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், 344 கிராம் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து அசோக் முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும். இந்த புகாரின் பேரில் முசிறி காவல் உதவி ஆய்வாளர் திருப்பதி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார்

ஆத்தூர் சாலைப்புதூரில் காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் விபரீத முடிவில் இளம்பெண்