in

பழனி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 2.99 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது

பழனி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 2.99 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது

 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள்  பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் 43 நாட்களில் நிரம்பியது.

இதையடுத்து  உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து  எண்ணப்பட்டது.  முதல் நாள் உண்டியல்  எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 99 இலட்சத்து இரண்டு ஆயிரத்து134 ரூபாய் ( 2,99,02,134) கிடைத்தது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல்தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும்  காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 927 கிராமும், வெள்ளி 14,047 கிராமும் கிடைத்தது.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 756 ம் கிடைத்தன.

உண்டியல் எண்ணிக்கையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுவதற்கு எச் ராஜா யார்? திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுவதற்கு எச் ராஜா யார்?

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்