in

20 அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்வு

சட்டசபை நிகழ்வுகளை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 20 அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர்

புதுச்சேரி சட்டப்பேரவை 15-வது தொடரின் 5 வது கூட்டத்தொடர் இன்று காலை 09.36 மணிக்கு கூடியது.சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க அவை தொடங்கியது.2017-ம் ஆண்டு புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து துணை நிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரனை மீது விவாதமும் 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் சட்டசபை நிகழ்வுகளை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள் சபை நிகழ்வுகளை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி வ.உ.சி, சுசிலா பாய், உள்ளிட்ட அரசு பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டசபைக்கு வந்தனர்.அவர்கள் சட்டசபை மைய மண்டபத்தின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர்.

What do you think?

மரக்காணம் பகுதியில் மணல் மேடுகள் அமைக்காததால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயம்

மின்துறை தனியார் மையம் மாகாது சபாநாயகர் செல்லும் சட்டப்பேரவை அறிவிப்பு.