in

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

 

புதுச்சேரி- அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது.

இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்று புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருப்பலி நிறைவேற்றி தொடர்ந்து கொடிக்கு சிறப்பு ஆராதனை நடத்தி பங்கும் மக்கள் மத்தியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நவ நாட்களில் காலை மாலை திருப்பலியும் சிறிய தேர் பவனி, நற்கணனை ஆசீரும் இடம்பெறும் என்றும் செப்டம்பர் 15 ஆம் தேதி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்துவ பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய அன்னையை வழிபட்டு சென்றனர்.

What do you think?

போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு

பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைத்த GOAT