in

காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

 

மயிலாடுதுறையில் காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு. மறைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர். தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் போலீசார் கலந்து கொண்டனர்.

What do you think?

ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு புத்தாடை போர்வைகள் உணவு வழங்கிய இளைஞர்கள்

பொதுவெளியில் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் மாணவர்கள்