in

பெட்ரோல் பங்கில் ரூபாய் 47 லட்சம் கையாடல்


Watch – YouTube Click

பெட்ரோல் பங்கில் ரூபாய் 47 லட்சம் கையாடல்

 

பெட்ரோல் பங்கில் ரூபாய் 47 லட்சம் கையாடல் செய்து தலைமறைவாக இருந்த மேலாளரை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் கருணாநிதி என்பவர் அதற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் வேதாரணியம் அருகே உள்ள ஆயக்கரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கடந்த 2014 முதல் 2017 வரை மேலாளராக பணியாற்றி உள்ளார்.

அப்போது அவர் சுமார் 47 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருணாநிதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்தி இன்று வேதாரண்யத்தில் இருப்பதாக போலீசருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து கார்த்தியை அதிரடியாக கைது செய்து அவரிடம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பழனியில் தீயாய் பரவும் கடிதங்கள் பாஜக நிர்வாகிக்கு இடையே பஞ்சாயத்து

செய்யாறில் சிஇஓ, டிஇஒவை மாற்றக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்