in

50 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலி கையெழுத்திட்டு அபகரித்த உறவினர்கள்


Watch – YouTube Click

50 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலி கையெழுத்திட்டு அபகரித்த உறவினர்கள்

 

திருவாரூரில் எழுத, படிக்கத் தெரியாதவரின் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலி கையெழுத்திட்டு அபகரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்.

85 வயதான இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர். இவருக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை அவரது உறவினர்களான மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் குலோத்துங்கன் ஆகியோர் சண்முகம் போன்று போலியாக கையெழுத்திட்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து சண்முகத்தின் மகன் வீரமணி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முறைகேடாக நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து விவரம் அறிந்துள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சண்முகம் மற்றும் அவரது மகன் வீரமணி ஆகியோர் போலியாக கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்ட மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் குலோத்துங்கன் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை மனுவினை அளித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் செங்காவி ஓவியங்கள்

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசம் தடை விதிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்