in

திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம். மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள வித்வான் மானைக்கால் தெருவில் இன்று மாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்து உள்ளது.இதில் அஜித்குமார், தினேஷ்குமார், மதி,பாண்டி உள்ளிட்டவர்களின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது .

உடனடியாக திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர் தீயை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் கோட்டூர் தீயணைப்பு வாகனமும் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீவிபத்தில் ஒரே நேரத்தில் 6 வீடுகள் எரிந்து அதில் இருந்த
பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

இந்த விபத்துக்கு காரணம் மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What do you think?

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு செடல் உற்சவம்

திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனை சாவடியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.