in

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம்

 

காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம் – விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஅழகியநல்லூர் கிராமத்தில் ஆனந்தபிரியா என்பவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்துவருகிறார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் வீட்டின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

இன்று ஆனந்தபிரியா தனது காரை வீட்டில் தனது பிள்ளை மற்றும் உறவினர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது.

இதில் வீட்டிலிருந்த ஆனந்த பிரியா (25), அருணா தேவி (27) லோகேஸ்வரி (17), ஆருஷ் (8), செவின் (3), சார்ஜன் (12) ஆகிய நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் மல்லாங்கிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா பூச்சொரிதல்

செங்கம் அருகே நடைபெற்ற எருது விடும் விழா சீரிபாய்ந்த காளைகள்