in

கிழாய் கிராமத்தில் ரூ 7.5 லட்ச மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழற்குடை

கிழாய் கிராமத்தில் ரூ 7.5 லட்ச மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழற்குடை

 

கிழாய் கிராமத்தில் 2023 = 2024 ஆண்டு சட்டமண்ற உறுப்பினர் தொகுதி மேபோட்டு திட்டத்தின் கீழ் பயணிகள் நிழல் குடையை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது கிழாய் கிராமம் இங்கு 2023-2024 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 7.5 லட்ச மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழற்குடை திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

நிழற்குடையை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார் விழாவில், மாவட்ட கவுண்சிலர் இளைய பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

What do you think?

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்