in

78வது சுதந்திர தினம்… நீருக்கடியில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்..

78வது சுதந்திர தினம்… நீருக்கடியில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்..

 

புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ் கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார்.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை ஒட்டி இவர் கடலுக்கு அடியில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

இந்த முறை 18வது ஆண்டு கொடியேற்றம் நீலாங்கரை மற்றும் ராமமேஸ்வரத்தில் இரு குழுக்களாக 20 வீரர்கள் தமிழக மீன்வள துறையுடன் இணைந்து கடலுக்கு அடியில் 40 அடி மற்றும் கரையிலிருந்து 5 கிமீ ஆழத்தில் தேசிய கொடியை ஏற்று மரியாதை செலுத்தினார்கள்.

ஏற்கனவே இந்த குழுவினர் உலக செஸ் போட்டி, காதலர் தினம், குடியரசு தினம் கிரிக்கெட் போட்டி போன்றவற்றை ஆழ்கடலில் நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

புதுச்சேரி கடலில் விசைப்படகுகளுடன் மீனவர்கள் தேசியக்கொடி அணிவகுப்பு

புதுச்சேரி..கடற்கரை சாலை காந்தி சிலை முன் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை…