in

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா

 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். எம்எல்ஏ எம்பிக்கள் பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்றார்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு அமைச்சர் கோவி செழியன் மாலை அணிவித்தார்.

அண்ணாமலைநகருக்கு வந்த அமைச்சர் கோவி செழியனை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அமைச்சர் கோவி செழியன் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி மலையரசன், முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, கிள்ளை பேரூராட்சி துணைத்தலைவர் கிள்ளை ரவிந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் மனோகர், சங்கர், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

What do you think?

அச்சரப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மோகனூரில் புரட்டாசி மாத பெளர்ணமி சிறப்பு அபிஷேக அலங்காரம்