in

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து


Watch – YouTube Click

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 6பெண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது57) இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி  வந்தது.

நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு அறைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50 மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மதியம் மணிக்கு பட்டாசு ஆலையில் ஒரு பகுதியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் பேன்சிரக வெடிகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த அறையில் இருந்து வெடித்து சிதறிய பேன்சி ரக பட்டாசுகள் அடுத்தடுத்து அறைகளுக்கு பரவியது. இதில் 10-க்கு மேற்பட்ட அறைகள் சேதம் ஆனாது. 8 அறைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அந்தந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிருக்கு அச்சப்பட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதில் சிலர் காயத்துடன் உயிர் தப்பினர். பலருக்கு கட்டிட இடிபாடுகள் மேலே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

சிலர் உடல்கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அறையின் வெளியில் தூக்கி வீசப்பட்டு கிடந்தனர். இந்த பயங்கர வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர வெடிவிபத்தில் 5பெண் தொழிலாளர்கள் உள்பட 9உடல்கள் கருகி இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திரும்பும் திசை எல்லாம் அழுகுரல் கேட்டது.இந்த விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு வாகனங்களில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆலமரத்துப்பட்டி சுப்புலட்சுமி (வயது 70), ரிசர்வ்லயன் மல்லிகா (35), ஆனையூர் பாறைப்பட்டி நாகஜோதி( 35), காந்திநகர் திருப்பதி (47) கண்ணன்  (30), மாரியம்மாள்( 50 ) அழகுராஜா ( 29), இந்திரா (48), ரெக்கம்மாள் ( 40) அம்சவள்ளி (32), திருத்தங்கல் ஜெயந்தி ( 42), அய்யம்பட்டி செல்வி ( 39)

வெடி விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் –
முதலி பட்டியை சேர்ந்த விஜயகுமார் (28), மத்திய சேனையை சேர்ந்த ரமேஷ் (31), வி. சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (47) அய்யம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (37).மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்து சம்பந்தம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நடக்க முடியாமல் மருத்துவமனையில் கவின்…குடும்பத்தை சுமந்த உயிர் நண்பன்

வேறு பெண்ணிடம் காதல் கொண்ட காதலனை பார்த்ததால் காதலியின் விபரீத முடிவு