in

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்காக உதவி செய்கிறேனா..!

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்காக உதவி செய்கிறேனா..!

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதாக KPY பாலா மீது அபாண்டமாக சிலர் குற்றம் சுமத்துவதாக கூறினார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோவின் மூலம் பிரபலமானவர்தான் கே பி ஒய் பாலா.

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவர் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களுக்கும் நலிந்த மக்களுக்கும் உதவி செய்து வருகின்றார்.

ஒரு பக்கம் இவரை பாராட்டினாலும் சிலர் இவரை விமர்சனம் செய்கிறார். அண்மையில் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் கே பி ஒய் பாலா. அந்நிகழ்ச்சியில் இவர் பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்து, நகைச்சுவையாக பேசி கல்லூரி மாணவிகளுடன் நடனமும் ஆடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இங்கு உள்ள மக்களின் அன்பு தான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் மற்றவர்களுக்கு கூறுவது ஓன்னே ஒன்னுதான் நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். அரசியளுக்கு வந்து தான் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று இல்லை என் பின்னால் பெரிய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

என்பினால் யாரும் இல்லை என்பின்னால் இருப்பது என்னுடைய கஷ்டங்களும், வெட்கமும், அவமானமும், வலியும் மட்டும்தான் என்னுடைய நல்ல காரியத்திற்காக தோள் கொடுப்பவர் என்னுடைய அன்பு அண்ணன் நடிகர் லாரன்ஸ்.

அவர்கள் மேலும் ஒரு சிலர் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள் கருப்பு பணத்தை நான் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக மக்களுக்கு உதவி செய்வது போல் நடிக்கிறேன் ..இன்னு சொல்கிறார்கள்.

மூன்று வேளை சாப்பாட்டுக்கே நான் கஷ்டப்பட்டவன் அதனால்தான் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் யார் என்ன விமர்சனம் செய்தாலும் என்’ சேவையை தொடர்வேன் என்றார்.

இறக்க தான் போகிறோம் ஒரு நாள் அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்….

What do you think?

அருப்புக்கோட்டை – பாளையம்பட்டி ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் கொடியேற்றம்

பார்ட்டியில் இப்படி செய்யலாமா? உலக நாயகன் லீலைகளை அவிழ்த்து விட்ட பாடகி சுசித்ரா