in

என்னை சீரியலில் இருந்து நீக்கியதற்கு சேனல் பதில் சொல்ல வேண்டும்’

என்னை சீரியலில் இருந்து நீக்கியதற்கு சேனல் பதில் சொல்ல வேண்டும்’

சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ரோஜா தொடர் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர். திடிரென்று திருமணம் செய்து மலேசியா சென்றுவிட்டார் கணவர் நடிக்க’ அனுமதிக்காததால் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்தவர்.

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிவதாக அறிவித்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நள தமயந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் என்னவோ சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த சீரியலில் சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா ஆக்சிடெண்டில் இறப்பது போல் காட்சி வைக்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட செந்தூரப்பூவே என்ற தொடரில் நடித்த ஸ்ரீநிதி இந்த சீரியலில் அதிரடியாக தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று வளைதளத்தில் கமெண்ட்ஸ் போட அதற்கு பதில் போட்டு இருக்கிற பிரியங்கா நல்காரி கதையின் அடுத்த கட்டத்திற்கு என்னை அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் திடீரென்று சீரியலில் இருந்து என்னை விலக்கி விட்டார்கள்.

நான் விலகவில்லை இதற்கு தகுந்த காரணத்தை எனக்கு சேனல் சொல்லியே ஆக வேண்டும் விரைவில் உங்களுக்கு உண்மை தெரியும் என்று போஸ்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

What do you think?

விரைவில் பாகுபலி 3

எங்கள் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை… ஜிவி பிரகாஷ்