in

வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு 3 ம் கட்ட அகழாய்வு ஜூன் முதல் வாரம் துவக்கம்


Watch – YouTube Click

வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு 3 ம் கட்ட அகழாய்வு ஜூன் முதல் வாரம் துவக்கம்

 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு 3-ம் கட்ட அகழாய்வுக்கான முன் ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி துவக்கபட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இரண்டு கட்ட அகழாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் 3-ம் கட்ட அகழாய்வு நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.இதையடுத்து தமிழக அரசு பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தது.

மக்களவை தேர்தல் காரணமாக மூன்றாம் கட்ட அகழாய்வு பணி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அகழாய்வு பணிகள் துவங்குவதற்கன முன் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது.

மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதனை சுத்தப்படுத்தி அளவீடு செய்வது,ஏற்கனவே நடைபெற்ற 2-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளை மூடுவது உள்ளிட்ட பணிகள் அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் முதல் வாரம் அகழாய்வு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை துவங்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் 3254 தொல் பொருட்களும்,2-ம் கட்டத்தில் 4660 பொருட்கள் என இதுவரை 7914 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணத்தை திருடிவிட்டு கடைக்கு தீ வைத்த திருடர்கள்

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்