in

குழந்தை வேண்டாம்..ன்னு சொன்னேன் தேவயானி கேட்கவில்லை

குழந்தை வேண்டாம்..ன்னு சொன்னேன் தேவயானி கேட்கவில்லை

 

சினிமா பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒரு சில பிரபலங்களே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகின்றன. ஒரு சிலர் திருமணம் செய்து செல்ல ஆண்டுகளிலேயே பிரிந்து விடுகின்றன.

காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியான தம்பதியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தேவயானி ராஜ்குமார்.

2001 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு பிரியங்கா, இனியா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் தன்மகள் இனியாவோடு பேட்டி இணைந்து பேட்டி கொடுத்த ராஜ்குமார் திருமணதிற்கு பிறகு தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் பலரின் விமர்சனங்களுக்கும் உள்ளானோம் முக்கியமாக நான் அழகாக இல்லை என்றும் ஒரு நடிகையை கல்யாணம் செய்து எப்படி வாழ போகிறார் ..இன்னு பலர் எங்களை விமர்சித்தனர்.

நாங்கள் கல்யாணம் பண்ணிய பிறகு நிறைய கஷ்டப்பட்டோம் என்பது உண்மைதான் நான் தேவயானியிடம் குழந்தை வேண்டாம் குழந்தை பிறந்தால் என்னை போல் தான் அதுவும் கஷ்டப்படும் என்று கூறிய போது தேவயானி ஒத்துகொள்ளவில்லை.

தேவயானிக்கும் முதல் குழந்தை உருவாகிய போது 48 நாட்களுக்குள்ளே அவருக்கு வலி வந்து விட்டது. நாங்கள் ஹாஸ்பிடல் இருக்கும்போது எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறந்த நேரத்தில் சரியாக 12.5 மணிக்கு குழந்தை பிறந்தது. எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு தம்பதி மருத்துவமனையில் கூடவே இருந்து உதவி செய்தார்கள்.

குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்ட பொழுதும் எங்கோ குழந்தை அழுகிறது ..இன்னு சொன்னேன் என் அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு தான் குழந்தை பிறந்திருக்கிறது..இன்னு சொன்னாங்க குழந்தை பிறந்த பிறகு தனி ஆளாக அந்த குழந்தையை வளர்க்க நாங்கள் நிறைய கிஷ்டபட்டோம்.

What do you think?

தொகுதிக்கான வெற்றி சான்றிதழினை சு. வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பெற்றுக்கொண்டார்

கல்கி 2898 AD trailer ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழுவினர்