in

திருத்தணியில் காதலியை கரம் பிடித்த நடிகர் பிரேம்ஜி

திருத்தணியில் காதலியை கரம் பிடித்த நடிகர் பிரேம்ஜி

45 வயது கடந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கங்கை அமரனின் மகனும் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜியின் திருமணம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் அண்ணன் தாலி எடுத்து கொடுக்க இந்துவின் கழுத்தில் காட்டினார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நேற்று காலை குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது .

இத்திருமணத்தில் நடிகர்கள் ஜெய், கிரீஸ், வைபவ், சங்கீதா உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

திருமணத்தின் போது வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி தனது மனைவியுடன் சேர்ந்து இளையராஜா பாடலை பாடினார்கள். பிரேம்ஜியின் மனைவி திரை துறையை சேர்த்தவரா என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது’.

இவர் சேலத்தை சேர்ந்தவர், வங்கியில் பணிபுரிபவர், இவர்களுகிடையில் எப்படி காதல் மலர்ந்தது எங்கு எப்போது சத்தித்து கொண்டார்கள் என்று தேரியவில்லை. ஆனால் காதலை பிரேம்ஜியிடம் முதலில் கூறியது இந்து தானாம். இவர்களின் திருமணம் புகைப்படங்களை வெங்கட் பிரபு வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்..

What do you think?

ரோஜாப்பூ வழங்கியும், பன்னீர் தெளித்தும் பள்ளி மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்….

இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாண் முன்னால் மனைவி