in

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி பொய்த்து போகும் விவசாயிகள் வேதனை


Watch – YouTube Click

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி பொய்த்து போகும் விவசாயிகள் வேதனை

 

மேட்டூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரைக் கொண்டு திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், 16.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வழக்கமாக, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம்தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இன்று தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், அணையில் 43.71 அடி நீர் அதாவது, 14.08 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

எனவே நடப்பாண்டு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொள்வது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் உள்ள நாகை மாவட்டத்தில், சுமார் 40,000 ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

பெரும்பாலும் ஆற்று பாசனத்தை நம்பியே குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள், மேட்டூர் அணை இன்று திறக்காததால், குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் கீழ்வேளூர் அருகே கடுவையாற்றில் குறுக்கே அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆத்தூர் தடுப்பணைக்கும், பாசன நீர் பாயும் கதவனை சட்டருக்கு, மலர்மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கைவிடப்பட்ட குறுவை சாகுபடிக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் மாநில நிர்வாகிகள் சேரன், காவிரி தனபாலன், பிரகாஷ் உள்ளிட்ட பல விவசாயிகள் பங்கேற்று மத்திய மாநில அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போகும் என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் மத்திய, மாநில அரசுகள் கர்நாடாகவில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்