in

குவைத் தீ விபத்தில் இருந்த திருச்சியை சேர்ந்தவர் உடல் சொந்த ஊருக்கு வருகை

குவைத் தீ விபத்தில் இருந்த திருச்சியை சேர்ந்தவர் உடல் சொந்த ஊருக்கு வருகை

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜி எபினேஷன் என்பவர் குவைத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், தீ விபத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜி எபினேசன் என்பவர் உயிரிழந்தார்.

தற்போது திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டது.

ராஜ் எபினேஷன் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ராஜு எபினேசர் உடலுக்கு மலர்வளையம் மரியாதை செலுத்தினார், தொடர்ந்து அரசு சார்பில் வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிவாரண தொகை காசோலையையும் மனைவியிடம் வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ராஜ் எபினேசர் உடல் நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

What do you think?

அனுமதி இல்லாமல் சட்டாம்பிள்ளை தனமாக ஒரு தனியார் போல கேரளா அரசு செயல்படுகிறது

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த செஞ்சியை சேர்ந்த முகமது ஷரீப் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது