in

லால்குடி எம்எல்ஏ இயற்கை எய்தினார் முகநூலில் பதிவிட்டுள்ளார் எம்எல்ஏ


Watch – YouTube Click

லால்குடி எம்எல்ஏ இயற்கை எய்தினார் முகநூலில் பதிவிட்டுள்ளார் எம்எல்ஏ

 

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறை எம்எல்ஏவாக இருப்பவர் சௌந்தர பாண்டியன். மூத்த அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதில்லை.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் நேரு பார்வையிட்டார். இந்த நிகழ்வு பற்றிய தகவல் அமைச்சர் நேருவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

“திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று எம்எம்ஏ செளந்திரபாண்டியன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம், திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நேரு, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் மேற்கொண்ட ஆய்வு குறித்து புகைப்படங்களுடன் பதிவுச் செய்திருந்தார்.

அதற்கு, எம்எல்ஏ செளந்திரபாண்டியன், தன்னை அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டு அதிரடித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை இருக்கையில் அமர வைக்க அனைவரும் உழைக்க வேண்டும்

திண்டுக்கல்லில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்