in

படகு சேவை மற்றும் தீம் பார்க் துவங்குவதற்கான சுற்றுலாத்துறை சார்பில் ஆய்வு


Watch – YouTube Click

படகு சேவை மற்றும் தீம் பார்க் துவங்குவதற்கான சுற்றுலாத்துறை சார்பில் ஆய்வு

 

தமிழக மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் வேளாங்கண்ணியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள அலையாத்தி காடுகள் வரை படகு சேவை மற்றும் தீம் பார்க் துவங்குவதற்கான ஆய்வு சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளில் வருகையை அதிகரிக்கும் விதமாக சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேளாங்கண்ணி ஆற்று முகத்துவாரத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், புதிதாக படகு சேவை துவங்கப்பட உள்ளது. இதற்காக 4.70.0 ஹெக்டேர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளை ஆற்றுக் கரையோரம் உள்ள அலையாத்திக் காடுகளோடு வேளாங்கண்ணி கடற்கரையை இணைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கும் இது வழிவகை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‌ தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் மண்டல மேலாளர் (சென்னை) ஆர். வெங்கடேசன் தலைமையிலான மண்டல சுற்றுலா அலுவலர் (பூம்புகார்) கஜேந்திரகுமார், மேனேஜர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் வேளாங்கண்ணியில் ஆய்வு மேற்கொண்டனர்.

வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள அலையாத்தி காடுகள் வரை படகுமூலம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, பேரூர் கழகப் பொறுப்பாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி கவுன்சிலர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் பாதுகாப்பு ஒத்திகை

 உடல் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளர் மாதவ சங்கர் உடலுக்கு அரசு மரியாதை