in ,

திண்டிவனம் அடுத்த பாதிரி கல்லங்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா

திண்டிவனம் அடுத்த பாதிரி கல்லங்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பாதிரி கல்லங்ககுப்பம் ஸ்ரீ அரசமரத்து அடி வலம்புரி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்களை சமைத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி, ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ நாகராஜா நாககன்னிகள் தேவைகள், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ கருட பகவான் சன்னதிகள் ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ வீரன் சுவாமி, ஸ்ரீ முனீஸ்வரன் சாமி ஸ்ரீ சப்த கன்னிகள் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக காலை 9.30 மணி அளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 9:45 மணி அளவில் ஸ்ரீ பூரணி பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய கருவறை விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்கள் ஸ்ரீ பூரணி பொற்களை சமேத ஐயனாரப்பன் சாமிக்கு மகாபிஷேகம் நடைபெற்றது மேலும் பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஐயனாரப்பன் குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்

What do you think?

ஆலகிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய சம்ப்ரோக்ஷனம் என்னும் மஹா கும்பாபிஷே விழா

திருத்துறைப்பூண்டி அருகே அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் ஆனி திருவிழா