in

திருமணம் ஆக விடாமல் தடுக்கும் முதியவரால் இளைஞர்கள் கடும் பாதிப்பு கொந்தளித்த இளைஞர்கள்


Watch – YouTube Click

திருமணம் ஆக விடாமல் தடுக்கும் முதியவரால் இளைஞர்கள் கடும் பாதிப்பு கொந்தளித்த இளைஞர்கள்

 

இளைஞர்களின் திருமணத்தை தடுக்கும் முதியவர் : முதியவரை கண்டித்து ஊரெங்கும் போஸ்டர் : திருமணம் ஆக விடாமல் தடுக்கும் முதியவரால் இளைஞர்கள் கடும் பாதிப்பு : கொந்தளித்த இளைஞர்கள் ஊரெங்கும் போஸ்டர் ஒட்டி பரபரப்பு

நெல்லை மாநகராட்சி எல்லை முடிந்து நாகர்கோவில் செல்லும் சாலை தொடங்கும் இடத்தில் உள்ளது பொன்னாக்குடி கிராமம்.

வன்மையாக கண்டிக்கிறோம் !

இந்த ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே நீ எத்தனை வருஷம் நல்லா வாழ்ந்திடுவ என்ற குறிப்புகளுடன் பொன்னாக்குடி ஊரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..

பொன்னாக்குடி ஊரைச் சேர்ந்த வயதான நபர் ஒருவர் ஊருக்குள் திருமணம் ஏதேனும் நிச்சயிக்கப்பட்டால் உடனடியாக அந்த வீட்டு நபர் குறித்து தவறாக தகவல் அனுப்பி திருமணத்தை நிறுத்துவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருவதாக அங்குள்ள இளைஞர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

பொன்னாக்குடி ஊரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட “90 கிட்ஸ்” இளைஞர்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தின் மீது அந்த முதியவருக்கு என்ன வெறுப்பு என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் ஊருக்குள் யாருக்காவது திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே மணமக்களின் வீட்டிற்கு மொட்டை கடுதாசி அனுப்பி மணமகனை பற்றி தவறாக சித்தரித்து அந்த முதியவர் கல்யாணத்தை நிறுத்தி வருவதாக இளைஞர்கள் பொருமுகின்றனர்.

தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் தடுக்கும் இந்த பெருசு ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

இவ்வாறாக செயல்படும் சிலரின் பெயர் தெரியும் என்றும் இனியும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஊர் எங்கும் ஒட்டப்படும் எனவும் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.

இளைஞர்களின் கல்யாண ஏக்கத்தை சிதைக்கும் இந்த ஊர் பெரியவர்களின் செயலால் அப்பகுதி இளைஞர்கள் கடும் கோபத்துடன் இருப்பதை உணர முடிந்தது.

ஊரெங்கும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்து அவர்களும் இது குறித்து விசாரித்து வருவதாக ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.

தங்கள் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என பேட்டி அளிக்க மறுத்த இளைஞர்கள் தாங்கள் பேட்டி அளித்தால் தங்கள் முகம் வெளியாகி திருமண இயக்கத்துடன் இருக்கும் தங்களை அனைவரும் மிக பரிதாபமாக பார்த்து கேலி செய்வார்கள் என சத்தியம் தொலைக்காட்சி நிருபரிடம் தெரிவித்தனர்.

முகம் காட்டாத இந்த இளைஞர்கள் முகம் தெரிந்த ஊர் பெருசுகளின் நயவஞ்சக செயலை தோலுரித்து காட்டுவதற்காக போஸ்டர்களை ஒட்டியதாக நம்மிடம் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் இதே நிலை நீடித்தால் 2026ல் பாஜக மக்களை சந்திக்கவே முடியாது

கீழ்வேளூர் எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்