in

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் மீறல்; பாஜக எம்எல்ஏவின் பேனரை போலீசார் அகற்றினர்

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் மீறல்; பாஜக எம்எல்ஏவின் பேனரை போலீசார் அகற்றினர்

 

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் மீறல்; பாஜக எம்எல்ஏவின் பேனரை போலீசார் அகற்றினர்- பாஜக பிரமுகர் மீது வழக்குபதிவு.

புதுச்சேரி முழுவதும் பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதை மீதி பேனர் வைப்பவர்கள் மீது, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி மாநில பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு, நகரம் முழுவதும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிக்னல் அருகே அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற கோரிமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ பேனரை அகற்றினர்.

மேலும் இதுகுறித்து பாஜக இளைஞரணி நிர்வாகி விக்கி மீது கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

புதுச்சேரியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர் கைது

புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்