in

இருசக்கர வாகனத்தை திருடிய நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்

பட்டப் பகலில் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்..

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பெரியார் நகர், ஆறாவது குறுக்கு தெருவில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அந்த தெருவில் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி டோப் செய்து எடுத்துச் சென்றனர். இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது..

மக்கள் நடமாட்டம் உள்ள நகரில் பகல் நேரத்திலேயே துணிச்சலாக இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What do you think?

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி நன்றி என வைத்திலிங்கம் எம்.பி.,தெரிவித்தார்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குரல் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்