in

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய் ,இளநீர், நெய், மஞ்சள், திருமஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு நறுமண பூக்கள் மற்றும் அருகம்புல் மாலையுடன் கூடிய வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திற்கான கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகிறது என்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சுவாமிமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்