in

திருச்சி விமான நிலையத்தில் ரூ 10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ 10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த ஜப்பானீஸ் யென் மற்றும் யூரோ வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பயணியை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய ரூபாய் மதிப்பு 10 லட்சத்து 33 ஆயிரம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

வருவாய்த் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.