in ,

மின் கட்டண உயர்வை திரும்ப பெற தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு மாவட்ட செயலாளர் காஜா ஸ்ரீ தலைமையில் மின் கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தியும், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க வலியுறுத்தியும் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பார்த்திபன் மற்றும் நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

What do you think?

நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் தேய்பிறை பஞ்சமி திதி ஹோமம்

பணத்துகாக ஒரு பெண்ணின் வாழ்கையை நடிகர் நெப்போலியன் வீணடித்துவிட்டார்