in

மயிலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மயிலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மயிலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூரில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் R.P. முருகன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பெரிய தெருவில் உள்ள கட்சி கொடியை ஒன்றிய அவை தலைவர் டிசி முருகன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பொது மக்கள் கலந்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் பாலு மகேந்திரன், வெங்கடேசன், பூபதி, ராஜ்குமார், குபேந்திரன், முரசு முருகன், சங்கர், முருகேசன், தாடி. முருகன், பிச்சைக் குமார், ராஜேஷ், அன்பு ரோஸ், பாரதி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

What do you think?

திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உரியடி திருவிழா

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (27.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News