in ,

நாகை அருகே தேவூர் அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

நாகை அருகே தேவூர் அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு; ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மாகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 3 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள், லஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதணை நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.

சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வேத மந்திரங்கள் முழங்கள ஆலய கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து ட்ரோன் மூலமாக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முனீஸ்வரன், ஐயப்பன் உள்ளிட்டு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷகம் நடைப்பெற்று மகா தீபாரதணை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

What do you think?

படபிடிப்பில் அடிபட்ட சமந்தா

மானூாில் 8ம் நுற்றாண்டை சோ்ந்த திருக்கோயில் மஹாகும்பாபிஷே விழா