in

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

 

குத்தாலத்தில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை, மூன்று பேர் கொண்ட கும்பல் தப்பிச்செல்லும் சிசிடிவி வெளியீடு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் புது நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கோ கலைவேந்தர். நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிய இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பட்ட பகலில் மதியம் ஒரு மணி அளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆசிரியர் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி பீரோவில் இருந்த ரூபாய் 20000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை நகரில் மிளகாய் பொடி தூவி டாஸ்மார்க் சூப்பர்வைசர் இடம் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில் பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் தெருவில் நடமாடி ஆசிரியர் வீட்டுக்கு செல்வதும் தொடர்ந்து அங்கே கொள்ளை அடித்து விட்டு ஓடிப் போகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

What do you think?

உறுமீன்’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்தார்

திருவேள்விக்குடி கன்னிகா பரமேஸ்வரி ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது