in

விஜய் கட்சி தொடங்கியது திமுகவை பாதிக்குமா பாதிப்பு வராது பாதிப்பு வந்தாலும் எதிர்த்து செய்வோம் அமைச்சர் நேரு பேட்டி.

விஜய் கட்சி தொடங்கியது திமுகவை பாதிக்குமா பாதிப்பு வராது பாதிப்பு வந்தாலும் எதிர்த்து செய்வோம் திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்று விட்டு வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நேரு…

லால்குடியில் பேசினது சர்ச்சை எல்லாம் ஒன்றும் இல்லை. அதிமுக 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டனர்.அந்த
வசனத்தை நாங்கள் இரண்டாம் முறையாக வருவோம். கலைஞருக்கு பிறகு இரண்டாவது முறை தளபதியை முதல்வராக கொண்டு வர வேண்டும் என பேசினேன். தோழமைக் கட்சிகளை வேண்டாம் என நான் குறிப்பிடவில்லை. எதிரணி பலம் இல்லை என குறிப்பிட்டேன்.

திமுகவை மீண்டும் எந்த நிலையிலும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். மேலும் கூட்டணியில் ஒருவரை வைத்துக் கொள்வதும் எடுப்பதும் தலைவருடையது. கூட்டணி கட்சிகள் யாரும் போகவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் தீனியாக வில்லை. நான் அந்த மாதிரி சொல்லவில்லை. மீண்டும் திமுக ஆட்சி தொடர்ந்து 50 ஆண்டுகாலம் கழித்து தொடர்ந்து வரவேண்டும்.

எந்த நிலையிலும் தயாராக அனைவரும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு சவாலாக இருக்குமா என்ற கேள்விக்கு நாங்கள் ஈசியாக ஜெயிப்போம்.முதல்வர் உடைய திட்டங்கள் பெண்களிடம் போய் சேர்ந்துள்ளது. பெண்கள் இயற்கையாகவே தளபதிக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். நடந்த ஆறு தேர்தலியும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மீண்டும் வெற்றி பெறும். அதற்கான ஆயத்தம் ஊக்குவிப்பதற்காக எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டுமே என குறிப்பிட்டு இருந்தேன். கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். கூட்டணி முடிவு செய்வது தலைவர். அவர் சொல்வதை வேலை செய்கிறதற்கு இடத்தில்
நாங்கள் இருக்கிறோம்.

நாங்கள் வலுவான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம் பத்தாண்டு காலம் வலுவான கூட்டணி வைத்திருக்கிறார் முதலமைச்சர்.நீங்கள் நினைப்பது போல் எந்த பதிலும் வராது திமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது.

ஆளுங்கட்சியாக இருக்கும்போது சிலருக்கு நன்மை கிடைக்கும் சில பேருக்கு கிடைக்காமல் போகும். எல்லாரையும் இழுத்துட்டு போக தான் கட்சி. யாரையும் விட்டு செல்வது கட்சி அல்ல. யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொண்டு திருப்திபடுத்துவதே கட்சி நடத்தவது. நீங்கள் நினைப்பது போல் பதில் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

விஜய் மாநாட்டுக்கு கூட திமுக அரசு அனுமதி தரவில்லை நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு…

அதை அவளை கேளுங்கள் என அமைச்சர் நேரு ஒருமையில் கூறினார். என்னிடம் ஏன் இதை கேட்கிறீர்கள் என்றார்.

What do you think?

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள்,இன்று (09.09.2024) முதல், காவிரி ஆற்றுப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சாலை விபத்து சிசிடிவி காட்சிகள்