in

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சாலை விபத்து சிசிடிவி காட்சிகள்

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சாலை விபத்து சிசிடிவி காட்சிகள்

தஞ்சை திருவாரூர் பகுதியில் இருந்து பருத்தி மூட்டைகளை ஏற்றி திருச்சி நோக்கி வந்த சரக்கு லாரி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வந்தப்போது இரவு கட்டுப்பாட்டை இழந்து 7 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்

பிரேக் பிடிக்காமல் வேகமாக வந்த லாரி பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில்மீது மோதும் சிசிடிவி பரபரப்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது

தஞ்சை திருவாரூர் பகுதியில் இருந்து பருத்தி மூட்டை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடை விதி பகுதியில் புதன் கிழமை இரவு 7.47 மணி அளவில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்துதிருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட பேரிக்காடை தட்டிக்கொண்டு வேகமாக சாலையில் வந்த லாரி 7 இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர சேர்ந்த முத்துக்குமார் (52) என்பவருக்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
மற்றொருவர் காட்டூர் பகுதியில் ஜிம் நடத்தி வரும் சுமன் (26) என்பவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது

இந்த நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த போக்குவரத்து பிரிவு போலீசார் லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச் சம்பவத்தால் காட்டூர் கடை வீதியில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். இந்த நிலையில் அந்த லாரியை எடுத்தால் லாரி பிரேக் ஃபெயிலியர் ஆகி பின்னோக்கி செல்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக டயர்களில் கட்டைகள் கொடுத்து நிறுத்தப்பட்டது.

லாரியை சரி செய்து அங்கிருந்து போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் காட்டூர் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றது. அதில் ஒரு அடுக்கு இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என நிறுத்தப்படுவதால் இருசக்கர வாகனங்கள் சாலையின் நடுவரை நிறுத்தப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக கூறுகின்றனர்

இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் விபத்து நடந்த பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது

What do you think?

விஜய் கட்சி தொடங்கியது திமுகவை பாதிக்குமா பாதிப்பு வராது பாதிப்பு வந்தாலும் எதிர்த்து செய்வோம் அமைச்சர் நேரு பேட்டி.

தொழில் முதலீடுகளை ஏற்க அமெரிக்க சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்