in

மேலூர் அருகே நடைபெற்ற கோவில் மகா கும்பாபிஷேகம்

மேலூர் அருகே நடைபெற்ற கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மத்தம் மேலநாடுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சின்னப்புலிய அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி, கடந்த 04ஆம் தேதி மகாகணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, நவகிரக பூஜை, பூர்ணஹுதியுடன் முதல்கால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து  இரண்டாம் கால யாகபூஜையும்,  மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்ட கும்ப குடங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட கும்ப புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கும்ப கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த, கும்பாபிஷேகத்தையொட்டி, மேலூர், அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்துக் கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, அருள்மிகு சின்னப்புலிய அய்யனாருக்கு பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது, விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அ.வல்லாளப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அடைப்பு

மதுரை வில்லாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.