in

கோபத்தில் நடிகர் பப்லு ….தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நடிகர்


Watch – YouTube Click

கோபத்தில் நடிகர் பப்லு ….தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நடிகர்

 

ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் சென்ற வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடம் மீது நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கை அற்றவர்கள் என்ற இரு பிரிவினர்களிடையே விவாதம் நடைபெற்றது.

ஜோதிடத்திற்கு ஆதரவாக நடிகர் அனுமோகன், காதல் படத்தில் நடித்த சந்தியா உள்ளிட்டோர் விவாதிக்க நம்பிக்கை இல்லை என்று நடிகர் பப்லு பேசினார்.

எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை என் மகனின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் இவர் சயின்டிஸ்ட் ஆக வருவார் என்று கூறினார். ஆனால் அவன் இன்னும் பேச கூட ஆரம்பிக்கவே இல்லை என்று கோபத்துடன் கூறினார்.

நடிகை சந்தியா பேசும்போது எனக்கு பட வாய்ப்புகள் இல்லாத போது ஜோதிடர் என்னை திருத்தணிக்கு போக சொன்னார் அதன் பிறகு ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்து நான் இப்போது நன்றாக இருக்கின்றேன் என்று சொல்ல அதற்கு காரணம் உங்கள் மூளையும் உழைப்பும் தான் திருத்தணி முருகன் அல்ல என்று சூடாக பதிலளித்தார் பப்லு.

இதனால் பப்லுவிற்கும் அனுமோகனுக்கும் இடையே கடும் விவாதங்கள் ஏற்பட்டது, ஜாதக அமைப்பு அவருக்கு சரியாக இருந்ததால் தான் பப்லு இந்த துறையில் புகழோடு இருக்கிறார் என்று கூற அவர் பேசுவது சுத்த நான்சென்ஸ் என்று நடிகர் பப்லு கத்த அந்த நிகழ்ச்சியில் இருந்து கோபித்து கொண்டு நடிகர் அனுமோகன் வெளியேறி விட்டார்.


Watch – YouTube Click

What do you think?

கல்வி கூடங்களில் திரைப்பட விழாக்கள் நடத்த கூடாது ..விரைவில் தடை

நடிகை ராஷ்மிகா மந்தனா விபத்து