in

திருச்சி இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை

திருச்சி இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூரில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் தற்கொலை தடுப்பு நாளையொட்டி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி சென்றனர்.
தற்கொலை தடுப்பு நாள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பேரணி சென்றனர்.

தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து தற்கொலை தடுப்பு சின்னத்தை உருவாக்கினர். தொடர்ந்து உறுதி மொழி ஏற்றனர்.
மாணவ – மாணவியரிடையே வளர்ந்து வரும் தற்கொலைகளைத் தடுக்கவும், தற்கொலை என்பது எந்த விடையும் அல்ல என்பது வலியுறுத்தும் விதமாக
மாணவ – மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வே இந்த நிகழ்வு.
இந்த நிகழ்வில் புல முதல்வர்கள், பேராசிரியர் கள், மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திருவாரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 கணக்கான ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (10.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News