in

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பிரதான சாலையில் இருகார்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பிரதான சாலையில் இருகார்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… கோர விபத்தில் 9 பேர் படுகாயம்…தகவலறிந்து திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை..

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஸ்டேட் பேங்க் அருகில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த காரும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தாயின் இறப்பிற்காக காரில் வந்த கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், கும்பகோணம் கல்யாணராமன் தெருவை சேர்ந்த ராஜாராமன், கும்பகோணம் விவேகானந்தா நகரை சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட மூன்று பேரும் மற்றொரு காரில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தி மயிலாடுதுறை நோக்கி சென்ற சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாஷ் மகள் தேன்மொழி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் உள்ளிட்டோரும் காயம் அடைந்தனர். திருவிடைமருதூரில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை திருவிடைமருதூர் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

விரைவில் முதல்வரின் கவணத்திற்க்கு கொண்டு சென்று பாலம் விரிவாக்கம் செய்யப்படும்.. நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பேட்டி….

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.