in ,

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்தனர்

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்தனர்

 

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா – நரியை பரியாக்கிய லீலை சுவாமியும், அம்மனும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்வாக நாளை மதியம் பிட்டு மண் சுமந்த லீலை நடைபெறுவதை முன்னிட்டு நாளை கோவில் நடை சாத்தப்படும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும்.
அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் சிவபெருமானின் லீலைகளை எடுத்துக்கூறும் வகையிலான நாள்தோறும் ஒவ்வொரு லீலைகள் நடைபெற்று அதன் பின்னர் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது போன்ற சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன.

நேற்று 7ஆம் நாள் நிகழ்வாக சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 8ஆம்நாள் நிகழ்வாக இரவு நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது. ஆடி வீதியில் 16 கால் மண்டபத்தல் நடைபெற்ற இந்த லீலை நிகழ்வின் போது கோவிலுக்குள் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், திருவாதவூரில் இருநது வெள்ளிக்குதிரை வாகனத்தில் மாணிக்கவாசகரும் கோவிலுக்குள் எழுந்தருளினர்.

நரியை பரியாக்கிய லீலை நிகழ்வை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தங்க குதிரை வாகனத்திலும், மீனாட்சியம்மன் தங்க குதிரை வாகனத்திலும் ஆவணி மூல வீதியில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில் நாளை மதியம் விழாவின் முக்கிய நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையானது புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோவிலில் இருந்து புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு கோவிலுக்கு வந்தடைவர்.

இதனால் நாளை காலை நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 – 12 மணி வரையும், மதியம் 3 முதல் 8 மணி வரையும் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

What do you think?

தொட்டியத்தில் போலீஸ் சீருடையில் வந்து பெட்ரோல் பங்கில் தகராறு

பிரியாணி சாப்பிட்ட 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர்க்கு வாந்தி, மயக்கம்