in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (13.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (13.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டிய 6 பிரிட்டிஷ் தூதர்களின் அங்கீகாரத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டிய 6 பிரிட்டிஷ் தூதர்களின் அங்கீகாரத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது. ரஷ்யா …வுக்கு தோல்வியை” ஏற்படுத்துவதில் பிரிட்டனின் ஈடுபாட்டைக் குறிக்கும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு சேவையான FSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆறு தூதர்களின் பெயரிடப்பட்டு ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரிட்டன் இன்னும் பதிலளிக்கவில்லை, பிரதம மந்திரி சர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனுக்கு வந்தபோது, ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நோக்கி தங்கள் ஏவுகணைகளை ஏவுவதற்கு கியிவ் அனுமதி வழங்கலாமா என்று விவாதித்ததனால் ஏற்பட்ட சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று ரஷ்யா சந்தேகப்படுகிறது.

ரஷ்யா உக்ரைனில் மோதலை ஆரம்பித்தது அதை முடிவுக்கு கொண்டு வர முடியும்

ரஷ்யா உக்ரைனில் மோதலை ஆரம்பித்தது அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று சர் கீர் ஸ்டார்மர் கூறினார். ஏவுகணைகள் ரஷ்யா மீது ஏவப்பட்டால் போர் தீவிரமாகும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிந்துரைத்ததையடுத்து, சர் கெய்ர் வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனில் தற்போது இருக்கிறார், ரஷ்யாவிற்குள் தங்கள் ஏவுகணைகளை ஏவுவதற்கு உக்ரைனுக்கு அனுமதி வழங்குவது குறித்து நட்பு நாடுகளுடன் விவாதிக்கின்றனர். “நிச்சயமாக, இது மோதலின் சாரத்தை, கணிசமாக மாற்றும்.”மேலும் எமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் நாங்கள் பொருத்தமான முடிவுகளை எடுப்போம்” என அவர் சர் கெய்ர் கூறினார். அவரது பதிலைக் கேட்ட ரஷ்ய மந்திரி நாங்களும் போரைத் தொடங்கிவிட்டதாக வலுவான தொனியில் கூறினார்.

இங்கிலாந்தில் “குடிமக்கள் நடுவர் மன்றம்”

இங்கிலாந்தில் “குடிமக்கள் நடுவர் மன்றம்”, உயிர் பிரியும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கும் சட்டத்தில் மாற்றத்தை ஆதரித்துள்ளது. 28 பேர் கொண்ட நடுவர் மன்றம் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கும் திறனைக் மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்கு சட்டப்பூர்வ அதிகாரங்கள் இல்லை என்றாலும், நடுவர் மன்றத்தை அமைத்த நுஃபீல்ட் கவுன்சில் ஆன் பயோஎதிக்ஸ், இது விவாதத்தில் ஒரு முக்கியமான புதிய ஆதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியது, கேர் நாட் கில்லிங் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த டாக்டர் கார்டன் மெக்டொனால்ட்” நீதிமன்றத்தில் உள்ள நடுவர் தீர்ப்பளிக்கும் வழக்காக பார்காமல் நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

What do you think?

டிஜிட்டல் வகுப்பறையை நகர மன்றத் தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்

நாமக்கல் ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு 1008 சங்க அபிஷேகம் பூஜை