in

புதுச்சேரி… சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விவேகானந்தன் தூக்கு போட்டு தற்கொலை….

புதுச்சேரி… சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விவேகானந்தன் தூக்கு போட்டு தற்கொலை….

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(57) கருணாஸ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதியவர் விவேகானந்தன் தற்போது சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வழக்கில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி 80 சாட்சிகளுடன், 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு குற்றவாளிகளையும் முதல்முறையாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.

செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளை (செப் 17ம்) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாளை வழக்கு விசாரணை ஆஜர் ஆக வேண்டிய நிலையில் தான் விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடலை மீட்ட சிறை அதிகாரிகள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

திரைப்படம் மனிதனை நல்லவனாக மாற்ற வேண்டும்…H. வினோத்

குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய புதுச்சேரி பாஜக எம்எல்ஏ