in ,

இராஜகோபாலசாமி கோவில் புரட்டாசி மாத விஸ்வரூப தரிசனம் கோ பூஜை

இராஜகோபாலசாமி கோவில் புரட்டாசி மாத விஸ்வரூப தரிசனம் கோ பூஜை

 

அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் ( கன்னியா மாதம் ) பிறப்பை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில்ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது. பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது.

பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா்.

பின்னா் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

அச்சிறுபாக்கம் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள்

கோவிலில் எளிமையாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த் அதிதிராவ்