in

தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

 

செஞ்சி நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு செஞ்சிஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா செஞ்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு நகர செயலாளர் கார்த்திக் தலைமையில்

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், ஆகிய கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி தந்தை பெரியாரின் கொள்கைகள் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர பொருளாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஜான்பாஷா, சிவக்குமார், சீனிவாசன், பொன்னம்பலம், மாவட்ட பிரதிநிதி ஜே.எஸ்.சர்தார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் சேகர் வார்டு செயலாளர் ஜி .டி. தனசேகரன், தொண்டரணி பாஷா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .

What do you think?

நடிகை ரித்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்